சில சமயங்களில் நம் முன்னோர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது இது சரியா?

பல மக்களாலும், கலாச்சாரங்களாலும், அவர்களின் மறைந்த மூதாதையர்கள் அவர்களை கண்காணித்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுகிறார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

எஸ்.எஸ். ஆர். எஃப் ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி, மூதாதையர்களால் நமக்கு உதவ முடியும் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது. உதவியின் அளவும் தரமும் பூமியில் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆன்மீக நிலை குறித்த அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்தது. குறைந்த ஆன்மீக நிலையில்  மறைந்த மூதாதையர்களால் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்களை விட குறைவாகவே உதவ முடியும். ஆன்மீக நிலை உயர்ந்தால், உதவியின் அளவும் தரமும் அதிகமாகும்.

கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளிலும், மூதாதையர்கள் தங்கள் சந்ததியினருக்கு உலக விஷயங்களிலேயே உதவி வழங்க விரும்புகிறார்கள்.

உதாரணமாக:

  • ஒரு மூதாதையர், நேர்காணல் செய்பவரின் மனதில் தனது சந்ததியினரை தேர்ந்தெடுக்கும் யோசனையை கொடுப்பதன் மூலம், தனது சந்ததியினருக்கு வேலை கிடைக்க உதவலாம்.
  • ஒரு பெண்ணுக்கு(சந்ததி) பிடித்தவரின் மனதில் அவளைப் பற்றிய எண்ணத்தை பதிய வைப்பதன் மூலம் அவரையே அவளது வருங்கால கணவராக அடைய உதவ முடியும்.

  • ஒரு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே அறிந்த ஒரு மூதாதையர், தனது சந்ததியினர் வீட்டை விட்டு வெளியேறுவதை தாமதப்படுத்த முயற்சி செய்யலாம், இதனால் விபத்து நடந்த இடத்திலிருந்து அவரை விலக்கி வைக்க முயற்சி செய்யலாம்.

மூதாதையர்கள், தங்கள் சந்ததியினருக்கு உதவுவதன் மூலம், உலக இன்பங்களின் மீது தங்கள் சந்ததியினருக்கு பற்றுதலை அதிகரிக்கிறார்கள், அதே நேரத்தில் தங்களையும் மேலும் பற்றுதலுக்கு ஆளாக்குகிறார்கள். மறைந்த மூதாதையர்கள் தங்கள் சந்ததியினருக்குச் செய்யக்கூடிய ஒரு உண்மையான உதவி, ஆன்மீக பயிற்சியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதாகும். மனிதகுலத்தில் 50% க்கும் அதிகமானோர் 30% ஆன்மீக நிலைக்குக் கீழே, குறைந்தபட்ச ஆன்மீக வலிமையுடன் உள்ளனர். இந்த மூதாதையர்கள் தங்கள் சந்ததியினருக்கு எந்த உதவியும் செய்வது மிகவும் கடினம். சில நேரங்களில் சூட்சும மந்திரவாதிகள் (மாந்திரீகர்கள்) போன்ற உயர் மட்ட பேய்கள் (பிசாசுகள், பேய்கள், தீய சக்திகள் போன்றவை) நம் மறைந்த, கீழ் மட்ட ஆன்மீக நிலையிலுள்ள மூதாதையர்களை சிக்க வைத்து துன்புறுத்தக்கூடும். இந்த கட்டத்தில், அவர்களிடமிருந்து பிழைப்பது மட்டுமே அவர்களின் மனதில் இருக்கும் ஒரே எண்ணமாகும்.

இருப்பினும், சில மூதாதையர்கள் தங்கள் சந்ததியினருக்கு உண்மையிலேயே உதவ விரும்பினாலும், உதவி செய்யும் மூதாதையர்களின் தலைவிதி ஒரு கண்ணாடி கூண்டில் சிக்கிக் கொள்வதற்கு ஒப்பானது. அவர்களால் தங்கள் சந்ததியினரின் அவல நிலையைப் பார்க்க முடியும், ஆனால் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கவோ அல்லது சரியான நேரத்தில் உதவி வழங்கவோ அவர்களை அணுக முடியாது. இது கீழே உள்ள இரண்டு காரணிகளில் ஒன்றால் ஏற்படலாம்:

  • சந்ததியினர், மூதாதையர்கள் அனுப்பிய சமிக்ஞைகளைப் பெறவோ புரிந்துகொள்ளவோ ​​இல்லை அல்லது அவற்றை நம்ப இல்லை.
  • மூதாதையர்களின் ஆன்மீக சக்தி, தேவையான உதவியைப் பெற இயலாமல் தோல்வியடைகிறது.

உதாரணமாக, ஒரு மறைந்த தந்தை தனது மகனுக்கு கனவுகள் மூலம் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் உள்ள ஆபத்து குறித்து எச்சரிக்க விரும்பலாம், ஆனால் மகன் கனவில் உள்ள அறிகுறிகளுக்கும் ஒப்பந்தத்திற்கும் இடையிலான தொடர்பை அறியமுடியாமல் இருக்கலாம் அல்லது அவ்வாறு செய்தாலும், அதற்கு போதுமான முக்கியத்துவத்தை அவர் கூறமுடியாமல் போகலாம், இதனால் செய்தி புறக்கணிக்கப்படலாம்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு மறைந்த தாய், தனது அன்பு மகன் ஒரு சூட்சும மந்திரவாதியால் திட்டமிடப்பட்ட ஒரு கொடிய போதைப் பழக்கத்திற்கு இரையாகும்போது, உதவியற்ற நிலையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். அந்த போதைப்பழக்கத்தின் மூல காரணத்தை அவள் புரிந்துகொள்கிறாள், மகனும் உலகமும் அதைப் பற்றி அறியாவிட்டாலும், அவளுடைய ஆன்மீக சக்தி சூட்சும மந்திரவாதியை விட மிகக் குறைவாக இருப்பதால், அவள் ஒரு உதவியற்ற பார்வையாளராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

   


குறிப்பு: ஒலி கோப்பைப் பதிவிறக்கம் செய்ய, தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்