1. நோய் முழுமையாக வெளிப்படும் முன் நோயின் அறிகுறிகள் தெரியும்

உடல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான காரணங்களால் ஏற்படும் நோயின் துயரங்கள், அந்நோய் 30% விருத்தி அடைந்த பின்பே தெளிவாக வெளிப்படும். அதன் பின்பே உளவியல் ரீதியாக அல்லது உடல் ரீதியாக தென்பட ஆரம்பிக்கும். நாமஜபத்தின் காரணமாக இந்த அறிகுறிகள் வெளிப்படும் முன்னரே நோய் இருப்பதை உணர முடியும். எதிர்காலத்தில் துயரம் ஏற்பட சாத்தியமாக இருந்தால், அல்லது தற்பொழுது துயரம் வெளிப்படாமல் இருந்தால், நாமஜபத்தின் மூலம் இத்துயரங்கள் உடல் அல்லது உளவியல் ரீதியாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதன் காரணம் யாதெனில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகள், நாமஜபத்தின் மூலம் நேர்மறை அதிர்வலைகளை பெறுவதனால் ஆகும். 30% வரை நோய் விருத்தி அடையும் வரை வைத்தியர்களால் கூட நோயினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மாறாக, 10-30% வரை நோய் விருத்தி அடையும் பொழுதே நாமஜபத்தின் மூலம் கண்டறிய முடிகிறது. உதாரணமாக ஒருவர் மன நோயினை கொண்டிருந்தால் நாமஜபத்தின் மூலம் அதை கண்டறியலாம்.

2. மன உறுதியினால் உடல் ரீதியாக ஏற்படும் நன்மைகள்

நாமஜபத்தின் மூலம் மனம் அமைதி அடையும்பொழுது, ஒருவரின் மன உளைச்சலால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து விடுதலை பெற்று சுகமான உடல்நலத்தை அனுபவிக்க முடிகிறது.

நாமஜபத்தின் மூலம் வயிற்று உபாதைகள் குறைவடைதல்: என்னுடைய வாழ்க்கை முறை, ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை போன்று ஓய்வற்ற தொடர்ச்சியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. பத்து வருடங்களாக தனித்திருந்து, எனது இரு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக வருமானம் தேடவேண்டியதாக இருந்தது. வீட்டு வேலைகளை கவனிப்பதோடு காரியாலய வேலைகளையும் கவனித்து வந்தேன். அக்காலங்களில் ஆன்மீக பயிற்சியை நான் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனது வயிற்றில் பதட்ட நிலையினை உணர ஆரம்பித்தேன். இதன் விளைவாக அமிலத்தன்மை அதிகரித்தது. 1998 இல் நாமஜபம் செய்ய தொடங்கியதும் மூன்றே மாதங்களில் எந்தவொரு மருந்தும் உட்கொள்ளாமல் எனது வயிற்று பிரச்சனைகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து போனதை என்னால் உணர முடிந்தது. – திருமதி ட்ராகனா கிஸ்லோவஸ்கி, ஐரோப்பா

3. குறிப்பிட்ட நோய்க்கு உரிய குறிப்பிட்ட ஆன்மீக நிவாரண நாமஜபங்கள்

இதைப்பற்றிய விரிவான தகவல்களை நோய்களிற்கான/ ஆரோக்கியதிற்கான நாமஜபங்கள் எனும் பகுதியில் காணலாம்.