வாசகர்களுக்கு ஒரு குறிப்பு:  இந்த கட்டுரை முதலில் செப்டம்பர் 2006 -ல் வெளியிடப்பட்டு 23 ஆகஸ்ட் 2023 -ல் புதுப்பிக்கப்பட்டது. மூன்றாம் உலகப் போர் – உயிர் காக்கும் வழிகாட்டி என்ற எங்களின் கட்டுரையையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

 

அட்டவணை

1. மூன்றாம் உலகப் போரின் கணிப்புகள் – ஒரு அறிமுகம்

சமீபத்தில் உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத நடவடிக்கைகள், போர் மற்றும் அரசியல் எழுச்சிகள் ஆகியவை அதிகரித்து வந்துள்ளன. இந்த போக்கிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது அது குறைவதற்கோ எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. உலகம் தறிகெட்டு ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி முழு வீச்சுடன் செல்வதைப் பார்த்து பலர், செய்வதறியாமல் திகைக்கலாம். நாஸ்ட்ரடாமஸ், எட்கர் கேய்ஸ் போன்ற தொலைநோக்கு கொண்ட பலர், பிரம்மாண்ட அளவில் துன்பகரமான பேரழிவுகள் ஏற்படும் என கணித்துள்ளனர்.

SSRF, இந்த ஆபத்தான போக்குகளுக்கு பின்புலமாக ஆன்மீக பரிமாணங்களில் நிகழ்வுகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கவும், வருங்காலம் மனிதகுலத்திற்கு என்ன வைத்துள்ளது என்பதை அறியவும் ஆன்மீக ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த கட்டுரையின் நோக்கம், ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவலை வழங்குவதாகும்:

  • மூன்றாம் உலகப் போர் போன்ற உலக நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை நிர்ணயிக்கும் ஆன்மீக சக்திகள்.
  • இந்த நிகழ்வுகளின் தாக்கத்தை குறைக்க அல்லது உலகப் போரின் போது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள மனிதகுலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்.

2. மூன்றாம் உலகப் போரின் கணிப்புகள் மற்றும் சூட்சும யுத்தம்

இந்த பிரபஞ்சம், பிரம்மாண்ட அளவிலான ஒரு சூட்சும யுத்தத்திற்கு மத்தியில் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையேயான இந்த யுத்தத்தின் பெரும்பான்மையான பகுதி, ஆன்மீக பரிமாணத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்தூலமான தளத்தில் இருக்கும் பூமியும் ஆன்மீக பரிமாணத்தின் நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறது. சூட்சும யுத்தத்தின் பரிணாமம், உலகை பல்வேறு நிலைகளில் துரித, அதிகரிக்கும் அளவிலான அழிவிற்கு தள்ளும் விதையாக விதைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வழிகளில் வேலை செய்கிறது:

  • உலகின் ஒட்டுமொத்த ஸாத்வீக தன்மையை இது குறைக்கிறது.
  • மனித குலத்தின் மீதுள்ள தீய சக்திகளின் பிடிப்பை இது வலுப்படுத்துகிறது.
இந்தியாவைச் சேர்ந்த உன்னத மகான் ஆதி சங்கராச்சாரியாரின் (8 - 9 -ஆம் நூற்றாண்டு) கூற்றுப்படி, தர்மம் என்பது 3 பணிகளை சாதிக்கின்றது:
 

1. சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்

2. ஒவ்வொரு உயிரின் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்

3. ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.

 

- ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்

1993 -ல் இருந்து, சூட்சும தீய சக்திகள் (அதிக பலம் பொருந்திய எதிர்மறை சக்திகள்) சமூகத்தின் சீரழிவு மற்றும் அதர்ம பெருக்கத்திற்கான விதைகளை விதைக்க துவங்கியது. பல வழிகளில், சமுதாயம் ஏற்கனவே சீரழிவுப் பாதையில் (அதாவது, ரஜ-தம -வின் அதிகரிப்பு) செல்ல ஆரம்பித்து விட்டிருந்தது. ஆன்மீக பயிற்சி இல்லாததால், மனிதனின் உலகப்பற்று அதிகரித்து, தர்மபற்று குறைந்து இந்நிலை ஏற்பட்டிருந்தது. அதிக சக்தி வாய்ந்த எதிர்மறை சக்திகளால், சமுதாயத்தின் சீர்குலைவு, விரைவாகவும் முழு வீச்சுடனும் நடந்தது. காலப்போக்கில் இந்த விதைகள் வேரூன்றி, சமுதாயத்தில் ரஜ-தம தன்மையை அதிகரிக்க செய்தது. சமுதாயம் மேலும் மேலும் தர்மத்திற்கு விரோதமாக ஆனபோது, அது தீய சக்திகளின் கைக்கூலியாக மாறி, சுற்றுச்சூழலில் ரஜ மற்றும் தம தன்மையை அதிகரிக்க செய்தது. அதிகரிக்கும் ரஜ மற்றும் தம தன்மையினால், மக்களிடமும் சூழ்நிலையிலும் ஒரு நிலையில்லாத தன்மை உருவாகிறது. இன்றைய இத்தகைய நிலை, இயற்கை பேரழிவுகளின் அதிகரிக்கும் தீவிரம் மற்றும் மூன்றாம் உலகப் போரில் சென்று முடியும்.

3. மூன்றாம் உலகப் போர் எப்போது தொடங்கும்?- நிகழ்வுகளின் காலவரிசை

பின்வரும் அட்டவணையில், நிகழ்வுகளின் காலவரிசை 2018 இல் முடிவடையும் உளவியல் போர், 2019 இல் தொடங்கும் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளன. நுட்பமான பகுதிகளில் இயக்கும் செய்யப்பட்டும்.. சூட்சும உலகங்களிலிருந்து அதிக சக்தி வாய்ந்த தீய சக்திகள் கையாளும் சில வழிமுறைகளின் உதாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையை நாங்கள் 2006 இல் முதலில் வெளியிட்டோம், மேலும் 2015 இல் இருந்து வெளிவரும் நிகழ்வுகள் பற்றிய கூடுதல் வழிகாட்டுதலை வழங்கியுள்ளோம். மூன்றாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தை எட்டும்போது, ​​பிரிவு 6-ல் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு காரணிகளைப் பொறுத்து குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான காலவரிசை மாறலாம் – 3ஆம் உலகப் போரைத் தவிர்க்க முடியுமா?

வருடம் நிகழ்வு
2000 தீவிர உள்நாட்டு சண்டைகளின் விதை சமூகத்தில் விதைக்கப்பட்டது
2001 சமுதாயத்தில் சமூக விரோத சக்திகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது
2002 வழிபாட்டு தலங்களில் முரணான வழிபாட்டு முறைகள் அதிகரித்ததால் ரஜ மற்றும் தம தன்மை அதிகரித்தது. கடவுள் வழிபாட்டு தலங்கள் சமுதாயத்தின் ஸத்வ கூறுக்கு பங்களிக்கின்றன. முறைகேடுகள் நடைபெறுவதன் விளைவாக ஸத்வ குணம்  (ஆன்மீக தூய்மை) குறைந்து, ரஜ மற்றும் தம குணம் அதிகரிக்கிறது.
2006 வழிபாட்டு தலங்களில் அழிவின் துவக்கத்தின் விதை
2011 பயங்கரவாதிகள் (அதிக பலம் பொருந்திய தீய சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ்) கைக்கொள்ளும் நடவடிக்கைகள், சமுதாய நலனிற்காக  போராடும் ஆன்மீக ஸ்தாபனங்களின் அழிவுக்கு வித்திட்ட விதையானது
2014 அதிகரிக்கும் இயற்கை பேரழிவு சம்பவங்கள்
2015 வெள்ளம் மற்றும் எரிமலைகளால் அழிவு
2015-2018
  • உளவியல் மட்டத்தில் போர் அதிகரித்தல். கோபமும், ஸ்திரமின்மையும் தேசங்களுக்கு இடையேயும், தேசங்களுக்கு உள்ளேயும் எழும். இதில், பல நாடுகள், இராணுவ சக்தியைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்துவது அல்லது ராணுவ பராக்கிரமத்தை வெளிப்படுத்துவது  போன்றவையும் உள்ளடக்கம்.
  • சிறிய போர்களும் நடக்கும்.
  • இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும்.
2019-2025
  • உளவியல் ரீதியாக நடந்து வந்த உலக நாடுகளின் போர், அதிகரித்து உண்மையான போருக்கு வழிவகுக்கும், இதுவே ஸ்தூல ரீதியில் மூன்றாம் உலகப் போராக தொடங்கும்.
  • தீயவர்களும், சமூக விரோத சக்திகளும் உடல்,உளவியல் மற்றும் ஆன்மீக அளவில் அழிக்கப்படுவர்.
  • இரண்டாம் உலகப் போரில், உலக நாடுகளில் சுமார் 30 நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றன. மூன்றாம் உலகப் போரில் உலகின் 50% நாடுகள் பங்கேற்கும். (அதாவது 90க்கும் மேலான நாடுகள்).
  • போரின் தீவிரம் 2024 இன் இரண்டாம் பாதியில் தொடங்கி 2025 இறுதி வரை தொடரும்.
  • இறுதிக் கட்டங்களில், சில நாடுகள் முழுமையாக தோல்வியடையும் நிலையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும். அணு ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம் பேரழிவு ஏற்பட்டு, ஒரு சில வாரங்களுக்குள் போர் முடிவடையும்.
  • ஏறத்தாழ இதன்மூலம் உலக மக்கள் தொகையில் பாதி அழிவை சந்திக்கும்.
2025 இறுதியில்
  • மக்கள் அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை இழந்து, தங்களின் மீட்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு மகான்களை நாட ஆரம்பிப்பார்கள் .
  • சுற்றுப்புற சூழல் சகஜ நிலைக்கு திரும்பி, பூமியில் ஒரு தெய்வீக ராஜ்யம் அமைக்கப்படும். ஸத்வ குணம் (ஆன்மீக தூய்மை) கணிசமான அளவில் அதிகரிப்பதாலும், உலகெங்கிலும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுவதாலும் இது தெய்வீக ராஜ்யம் என்றழைக்கப்படும்.
  • ஸத்வ கூறு(ஆன்மீக தூய்மை) அதிகரிக்கும் போது, காலநிலை மாற்றங்கள் படிப்படியாக சீராகும்
  • தெய்வீக ராஜ்யத்தின் ஆட்சி முறையை கற்றுக் கொள்வது ஆரம்பமாகும்.
  • இந்தப் போரின் தாக்கம் 30 ஆண்டுகளுக்கு நீடிக்கும், பூமியில் உயிர்களை மீளமைக்க 100 வருடங்கள் எடுக்கும்.

மூன்றாம் உலகப் போரை தவிர்க்க முடியுமா என்ற பகுதியை பார்க்கவும்.

4. மூன்றாம் உலகப் போரின் தீவிரத்தை பற்றிய கணிப்பு

முன்னர் கூறியபடி, பூமியில் நடக்கும் ஸ்தூல அளவிலான யுத்தத்திற்கு, பெரும்பாலும் ஆன்மீக பரிமாணத்தின் நிகழ்வுகளே காரணமாகும். ஆகையால், அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு, உன்னத ஆன்மீக நிலையில் இருப்போரால் மட்டுமே யுத்தத்தின் மூல காரணங்களை உணர முடியும். உண்மையில், யுத்தத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே ஸ்தூல நிலையில் பூமியில் உணர முடியும். எனினும், இந்த சிறு பகுதியே மனித குல பேரழிவுக்கு போதுமானதாகும். அதிகரித்த இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போரில் அணு ஆயுதங்கள் போன்ற வெகுஜன அழிவு ஆயுதங்கள் மூலம் இந்த மனித குல பேரழிவு நடக்கும்.  ஆன்மீகத் தூய்மை குறைந்து அதர்மம் மேலோங்குவதால், வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் எரிமலைகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும். இந்த நிகழ்வுகள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சி, இயற்கை பேரழிவுகள் – ஒரு ஆன்மீக கண்ணோட்டம் என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலகப் போர் ஏற்பட காரணமாக விளங்கும் நபர்களும் நிகழ்வுகளும், அதிக பலம் பொருந்திய சூட்சும தீய சக்திகளின் (மாந்த்ரீகர்கள்) கட்டுப்பாட்டில் இருப்பர்.

சூட்சும மற்றும் ஸ்தூல அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, பல்வேறு உலகப் போர்களுக்குள் இடையேயான தீவிரத்தை பின்வரும் அட்டவணை ஒப்பிடுகிறது.

போரின் பெயர் வருடம் சூட்சும மற்றும் ஸ்தூல யுத்தத்தின் தீவிரத்தன்மையின் ஒரு ஒப்பீடு
முதலாம் உலகப் போர் 1914 – 1918 1
இரண்டாம் உலகப் போர் 1939 – 1945 1.5
மூன்றாம் உலகப் போர் 2015 – 2025 4.5*

*குறிப்பு: மூன்றாம் உலகப் போர் முடிவடையும் சமயத்தில், யுத்தத்தின் காரணமாக ஏற்படும் அழிவின் தீவிரமானது, முதலாம் உலகப் போரை விட 4.5 மடங்கும், இரண்டாம் உலகப் போரை விட 3 மடங்கும் அதிகமாக இருக்கும்.

மேலே உள்ள அட்டவணையின் மூலம் சூட்சும யுத்தம் மற்றும் மூன்றாம் உலகப் போரின் அளவு பற்றி ஓரளவு புரிந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்து பேரழிவுகளும், பயங்கரவாத நடவடிக்கைகளும் சூட்சும யுத்தத்துடன் நேரடி சம்பந்தமுடைய நிகழ்வுகளாகும். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மனப்பான்மை கொண்டவர்களை, மாந்த்ரீகர்கள் போன்ற அதிக பலம் பொருந்திய தீய சக்திகள் பீடித்து, அவர்களின் மூலம் மனித குல அழிவை ஏற்படுத்தும் தீவிரவாத நடவடிக்கைகளை நிறைவேற்றுகின்றனர்.

மூன்றாம் உலகப் போரின் கணிப்புகள்

மூன்றாம் உலகப் போரின்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

மூன்றாம் உலகப் போரின் கணிப்புகள்

பேரழிவுகள், நோய்கள் மற்றும் சமூக கொந்தளிப்புகளை ஆவிகள் எவ்வாறு நடத்துவிக்கின்றன? 

5. மூன்றாம் உலகப் போரின் முக்கிய கட்டங்கள் மற்றும் சூட்சும யுத்தம்

5.1 மூன்றாம் உலகப் போரின் கணிப்புகள் – மூன்றாம்  உலகப் போருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், எந்த நிகழ்வு அதை தூண்டப் போகிறது?

SSRF, ‘சூட்சும உலகம்' அல்லது 'ஆன்மீக பரிமாணம்' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

மூன்றாம் உலகப் போர் முக்கியமாக சக்திவாய்ந்த நுட்பமான எதிர்மறை சக்திகளால் தூண்டப்படும். உயர்ந்த எதிர்மறை ஆற்றல் குறைந்த ஆன்மீக ஆற்றல் மேல் அனுகூலம் செலுத்தி, ஆளுமை குறைபாடுகள் மற்றும் மக்களின் உயர்நிலை அகம்பாவங்களை தூண்டி அவர்களை விளிம்பிற்கு தள்ளி,  நாடுகளை தங்களுக்குள் போர் தொடுக்கத் தூண்டும். மூன்று உலகப் போர்களிலும் (அதாவது, முதலாம் உலகப் போரிலிருந்து மூன்றாம் உலகப் போர் வரை), கீழ்த்தட்டு பாதாளங்களிலுள்ள அதிக பலம் பொருந்திய தீய சக்திகள், நாடுகள் தங்களுக்குள் போரில் ஈடுபடுவதற்கான முழுமுதற் காரணமாக இருந்துள்ளன. எந்த நிலை பாதாளத்திலிருந்து எந்த சூட்சும தீய சக்திகள் உலகப் போர்களை தூண்டிவிடுவதற்கு காரணமாயிருந்தன என்பதை பின்வரும் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

  • முதலாம் உலகப் போர்:இரண்டாம் நிலை பாதாளத்தின் சூட்சும மாந்த்ரீகர்கள்.
  • இரண்டாம் உலகப் போர்:இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் மூன்றாம் நிலை பாதாளத்தின் சூட்சும மாந்த்ரீகர்கள் பங்கு பெற்றனர். உதாரணத்திற்கு, ஹிட்லர் தனது பதவி காலம் முழுவதும் ஐந்தாம் நிலை பாதாளத்தின் சூட்சும மாந்த்ரீகனால் பீடிக்கப்பட்டிருந்தான். இதுவே அவனது வியக்கத்தகு அதிகார வளர்ச்சிக்கு காரணமும் ஆகும். அவனது ஆட்சி காலம் முழுவதும், சூட்சும மாந்த்ரீகன் வெளிப்பட்ட நிலையில் இருந்தான்.
  • மூன்றாம் உலகப் போர்:நான்காம் நிலை பாதாளத்தின் சூட்சும மாந்த்ரீகர்கள் ஸ்தூலத்தில் நடக்கப் போகும் மூன்றாம் உலகப் போரின் பின்னணியில் இருப்பார்கள். எனினும், சூட்சும யுத்தத்தில், ஏழாம் நிலை பாதாளத்தின் (இது பாதாளத்தின் ஆழமான பகுதி) சூட்சும மாந்த்ரீகர்கள் பங்கேற்பார்கள். 2017-2025 ஆண்டுகளில், ஆறாம் மற்றும் ஏழாம் நிலை பாதாளத்தின் சூட்சும மாந்த்ரீகர்கள் இந்த சூட்சும யுத்தத்தில் ஈடுபடுவர்.

மூன்றாம் உலகப் போர் 2015 -ல் துவங்கி 2025 வரை 11 ஆண்டுகள் தொடரும். அந்த காலக்கட்டத்தில் சண்டையிடப்படும் போர்கள் ஒன்றோடோன்று தொடர்புள்ளவை. இருப்பினும், அது உலகிற்கு வெளிப்படையாக தெரியாது. இந்த காலகட்டத்தின் முடிவில், அணு உஆயுதங்கள் உட்பட வெகுஜன அழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். இதுவரை கண்டிராத அளவில் மனிதகுல அழிவு நேரும்; மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% மக்கள் அழிந்து விடுவர். சில நாடுகள் மற்றவற்றை விட அதிகமாக பாதிக்கப்படும். பல்வேறு துறைகளில் பரஸ்பரம் இணைக்கப்பட்ட உலகில், அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் என்பதை சொல்லத்  தேவையில்லை.

நல்ல மற்றும் தீய சக்திகளின் கண்ணோட்டத்தில், மூன்றாம் உலகப் போர் மற்றும் ‘தெய்வீக ராஜ்ய’ ஸ்தாபனத்தின் கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வருடம் மூன்றாம் உலகப் போரின் கட்டங்கள்
2015 துவக்கம்
2016 – 2018 தீய சக்திகளின் கீழ், அதர்ம ஜனங்களின் அதிகரிக்கும் வெற்றிகள்
2019 – 2021 தர்மமும் அதர்மமும் சரிசம நிலையில்
2022 – 2025 தெய்வீக சக்திகளின் கீழ், தார்மீக ஜனங்களின் அதிகரிக்கும் வெற்றிகள்
2025 இறுதியில் ‘தெய்வீக ராஜ்ய’த்தின் ஆரம்பம்

5.2 மூன்றாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கு

தொன்றுதொட்டு, உலகின் ஆன்மீக குருவாக இந்தியா திகழ்கிறது. ஆன்மீக கண்ணோட்டத்திலிருந்து இந்த யுத்தத்தில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆன்மீக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப் போரின் தீவிரத்தை குறைக்க, இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மகான்கள் உலகின் ஸத்வ கூறுகளை அதிகரிக்க தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். போரின் போது, ​​எதிர்மறையான சூட்சும தீய சக்திகள் இந்தியாவின் முக்கிய பங்கெடுப்பை ஆட்டங்காணச் செய்வதற்காக, இந்தியாவை தாக்குவதற்கு அண்டை நாடுகளை தூண்டிவிடும். இதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் சுமார் 50% அழிந்து விடுவர்.

6. மூன்றாம் உலகப் போரை தவிர்க்க முடியுமா?

இந்த கேள்விக்கான சுருக்கமான பதில் ‘இல்லை’ என்றாலும், மூன்றாம் உலகப் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளின் தீவிரம் மற்றும் காலவரிசை மாறுபடக் கூடும்.

முதலில், இந்த பேரழிவு நிகழ்வுகளை ஏன் தவிர்க்க முடியாது என்பதன் காரணத்தை பற்றி பார்க்கலாம். பூமியில் உள்ள ரஜ-தம அல்லது ஆன்மீகத்தின் தூய்மையற்ற நிலை கடந்த சில பத்து வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணம் மக்களின் ஆளுமை குறைகளின் அதிகரித்த தீவிரம், உலக விஷயங்களின் மீது அதிக கவனம், (பிரபஞ்ச ஆன்மீக தத்துவங்களின்படி) ஆன்மீக பயிற்சி செய்யாதது  மற்றும் ஆன்மீக பரிமாணத்திலிருந்து சூட்சும தீய சக்திகள் மக்களை பாதித்து மற்றும் பீடித்து அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வைத்தல் போன்றவை ஆகும். எப்பொழுதெல்லாம் உலகில் ரஜ-தம கூறுகள் அதிகமாகின்றதோ, அப்பொழுது ​​அது மக்கள் மற்றும் சூழலில் உள்ள நிலையற்ற தன்மையை அதிகரிக்கிறது. இது இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், போர்கள் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வித்திடுகிறது. இது ஒரு சுத்தப்படுத்தும் தானியங்கி செயல்முறை போன்றது, இதன் மூலம் ரஜ-தம பிரதானமான மக்கள் அழிகின்றனர். இந்த போக்கிற்கு மாற்று மருந்தாக உள்ள ஒரே வழி, உலகின் ஸத்வ சூட்சும கூறுகளை அதிகரிக்க  செய்து, ரஜ மற்றும் தம சூட்சும கூறுகளை குறைப்பதாகும். இவ்வாறு நடக்க, மனிதகுலம் தற்போதைய வாழ்க்கை முறையில் 180-டிகிரி மாற்றங்களை செய்ய வேண்டும் மற்றும் ஆன்மீக பயிற்சியின் 6 அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் ஆன்மீகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்க ஆன்மீகத்தை கடைப்பிடிக்கும்போது மட்டுமே ஆன்மீக முன்னேற்றம் நிகழ்கிறது. தன்னுடைய மதமே கடவுளை அடையும் ஒரே வழி என்று சொல்லிக்கொண்டு, பலவந்தமாக அல்லது லஞ்சம் மூலம் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்வது ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளை மீறுவதாகும். இதனால் அத்தகைய நடைமுறைகளை பின்பற்றுபவர்களின் ஆன்மீக முயற்சிகள் பயனற்று போகும். சில சமயங்களில் மதங்கள் சமுதாயத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கின்றன; இது போன்ற முறைகளை கையாளுபவர்கள் ஆன்மீகத்தில் மிகக் கீழே சரிந்து தீவிர எதிர்மறை கர்மவினையை சம்பாதிக்கின்றனர். இந்த 180-டிகிரி மாற்றம் சாத்தியமானதாக இல்லாததால், முன்பே கணித்துள்ள அழிவு தவிர்க்க முடியாததாக ஆகிறது.

எனினும், நிகழ்வுகளின் தீவிரமும் காலவரிசையும் மாறலாம்.

உலகம் இந்த பேரழிவை நோக்கி நெருங்கும் இந்த சமயத்தில், ​​பூமியிலுள்ள மிக உயர்ந்த நிலையிலுள்ள மகான்கள், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், உலகப் போரின் தீவிரத்தை குறைக்கவும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். ஸாதகராகும் திறன் மிக்க நபர்கள் ஒவ்வொருவராக ஆன்மீக பயிற்சி ஆரம்பிக்கையில், இந்த உன்னத மகான்கள் தங்கள் சங்கல்பத்தின் மூலம் கால நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு ஒத்திப்போட முயற்சிக்கிறார்கள். இதனால் இந்த ஸாதகர்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்கவும் பலப்படுத்தவும் அதிக நேரம் கிடைக்கிறது.

யார் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொருத்து நேரம் மற்றும் தீவிரம் சிறிது மாறலாம்; தீய சக்திகள் அதிக முயற்சிகளை மேற்கொண்டால், தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கும். மாறாக, பலர் ஆன்மீக பயிற்சியை ஆரம்பித்தால், அழிவு காலத்தின் தீவிரம் குறையலாம்.

பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களின் வார்த்தைகளின்படி,  ஸாதகர்களுக்கு இறைவனிடம் உள்ள பக்தியைப் பொருத்து, பக்தர்களுக்கும் (தர்மத்திற்கும்)  அசுர சக்திகளுக்கும் (அதர்மத்திற்கும்) இடையேயான போரின் கால அட்டவணையை மாற்றியமைக்க முடியும். மனித இனத்தின் விதியை ஆன்மீக பயிற்சியின் மூலம் சிறப்பாக மாற்ற முடியும்.”

தனிப்பட்ட நிலையில், மூன்றாம் உலகப் போரில் உயிர் பிழைப்பவர்கள்,  ஆன்மீக பயிற்சி செய்து 50% ஆன்மீக நிலைக்கு மேல் இருப்பவர்களாகவோ அல்லது ஆன்மீகத்தில் முன்னேறும் திறன் உடையவர்களாகவோ இருப்பர்.

7. இந்த சூட்சும யுத்தத்தில் சண்டையிடும் தெய்வீக சக்திகள் எவை?

இந்த சூட்சும யுத்தம் 1999-2025 கால கட்டத்தில் நடக்கும். தொடர்ச்சியாக நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் பூமியில் நல்ல சக்திகளை (90 % ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள மகான்-பராத்பர குரு) ஒருவர்  வழிநடத்தி செல்வார். யுத்தத்தின் துவக்கத்தில், பராத்பர குருவும் ஒரு சில ஸாதகர்கள்  மட்டுமே யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். காலப்போக்கில், மகான்களும், ஸாதகர்களும் சூட்சும யுத்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். பிரபஞ்சத்தின் உயர்ந்த பகுதிகளில் இருக்கும் ஆன்மீக வளர்ச்சியடைந்த உன்னத சூட்சும தேஹங்களும் தீய சக்திகளை வெல்வதற்காக இந்த யுத்தத்தில் கலந்து கொள்வர்.

8. முடிவுரை

சகாப்தங்களை மாற்றியமைக்கும் முக்கியமான, மிகப் பெரிய சவாலான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கட்டுரை சமூகத்தை பயப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. மாறாக, சமுதாயம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்களும் ஸாதகர்களும் இந்த கட்டுரையைப் புரிந்துகொண்டு, தங்கள் ஆன்மீக பயிற்சியைத் துவங்கவோ அல்லது வலுப்படுத்தவோ வலியுறுத்துகிறோம். ஆன்மீக வளர்ச்சிக்கு இந்த காலகட்டம் மிகவும் உகந்ததாகும் என்பதை நல்லது மற்றும் தீயது என்ற கட்டுரையில் விரிவாக விவரித்துள்ளோம். தீவிர ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம், ஸாதகர்கள் மூன்றாம் உலகப் போரின் தீவிரத்தை குறைப்பதற்கும் தங்களைப் பாதுகாப்பதற்கும் வழி உள்ளது. வெளிநாட்டிற்கு செல்ல விசா தேவைப்படுவது போல, தெய்வீக ராஜ்யத்தில் வாழ வழங்கப்படும் விசா, நம்மிடம் ஆன்மீக முன்னேற்றம் அடையும் திறன் உள்ளதா என்பதை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நபர் ஆன்மீக பயிற்சி மேற்கொண்டு, ஸாதகராக மாற முயற்சி செய்தால் மட்டுமே கடவுள் அந்த நபர் காப்பாற்றுவதற்கு  தகுதியானவர் என்று தீர்மானிப்பார்.

இறுதியில், இந்த போர் ஒரு நாட்டை இன்னொருவர் தோற்கடித்து தங்களின் வாழ்க்கை முறைகளை காப்பாற்றுவது பற்றி அல்ல. இது சுதந்திரம் அல்லது ஜனநாயகம் அல்லது எந்தவொறு ஆட்சி முறையை பற்றியதும் அல்ல. இது நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போர், இது ஆன்மீகப்படி தூய்மையான நிலைக்கும்  தூய்மையற்ற நிலைக்கும் இடையேயான ஒரு யுத்தம். இது ஒரு ஆன்மீக போர்; உலகை ஆன்மீக தூய்மை பெற செய்யும் போர். அதனால், தங்களிடம் ஆன்மீக ரீதியில் ஸத்வ கூறு அதிகம் உள்ளவர்கள் காப்பாற்றப்படுவர்.

“ஏதாவது தவறாக நடக்கும்போது அல்லது நாம் இறக்கும் சமயத்தில், ​​நாம் கடவுளை நினைப்போம். அந்த நேரத்தில் மக்கள் பொதுவாக ‘ஓ கடவுளே’ என்ற வார்த்தைகளை கூறுவர்.

மாறாக நீங்கள் இப்போது கடவுளை நினைத்து (உலகப் போருக்கு முன்) ஆன்மீக பயிற்சி செய்தால், போர் துவங்கும்போது, கடவுள் உங்களை நினைத்து உங்கள் உயிரை காப்பாற்றுவார்.  அப்போது ‘ஓ கடவுளே’ என்று சொல்ல தேவையிருக்காது. இது நடக்கும்போது, வெறுமனே ‘கடவுளுக்கு நன்றி’ என்று மற்றவர்களிடம் சொல்லுவதற்கு பதிலாக, மனமாற கடவுளிடம் நன்றி தெரிவிக்க நினைவு கொள்ளவும்.”

பராத்பர குரு டாக்டர் ஆடவலே